புத்தகம் படித்தால் சிறைத் தண்டனையில் இருந்து விடுதலையா? (read book no jail)

புத்தகம் படித்தால் சிறைத் தண்டனையில் இருந்து விடுதலையா? அறிவின் இரத்தம் புத்தகம் என்னும் பொன்மொழி சொல்லும் புத்தகத்தின் மகத்துவத்தை. அந்தவகையில் ஒரு நல்ல புத்தகம் திறந்துகொண்டால் நரகத்தின் வாசல் மூடப்படும் என்பது போல் சிறச்சாலையில் இருந்து விடுதலை அடையவும் புத்தகம் உதவுகின்றது என்பது எத்தனை பேருக்குத் தெரியும். அதை விளக்குவதே இப்பதிவு. சிறைத்தண்டனை பொதுவாக ஒருவரின் குற்றம் நிரூபி்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டால் அத்தண்டனை முழுவதையும் அவர் அனுபவித்தாகவேண்டும். ஆனாலும் அவரின் தண்டனையானது சிறைக்காலத்தில் அவரின் நன்னடத்தை வெளிப்பாட்டின் அடிப்படையில் குறைக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. அல்லது கரண்டியால் சுரங்கம் தோண்டியோ அல்லது வாடனுக்கோ சிறைக்காவலருக்கோ கையுட்டு கொடுத்தோ தப்பித்தால்தான் உண்டு. இவ்வாறு புத்தகம் படித்தால் சிறைத்தண்டனையைக் குறைத்து விடுதலை செய்யும் நாடுதான் பிரேசில் நாடு. புத்தகம் வாசிக்கும் சிறைக்கைதி பிரேசில் நாடு ஏன் இந்த திட்டத்தைக் கொண்டு வந்தது? இந்தத் திட்டத்தை பிரேசில் அரசாங்கம் 2012ல் இத்திட்டத்தைக் கொண்டு வந்தது. (Redemption of Reading) பிரேசி...